விருதுநகரில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் தீவிரவாதத்திறகு எதிராகவும், மனித நேயம் காக்கவும் வலியுறுத்தி முஸ்லீம்கள் மனித சங்கிலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விருதுநகரில் நடந்த மனித சங்கிலிக்கு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாவட்ட தவைவர் அபுப்பக்கர் சித்திக் தலைமை வகித்தார். இதில், விருதுநகர் பாத்திமா நகர் முதல், எம்.ஜி.ஆர். சிலை வரையில் முஸ்லீம்களின் மனித சங்கிலி நடைபெற்றது. இதில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் தீவிரவாத்திற்கு எதிரான பாதகைகளை ஏந்தி மனித சங்கிலியில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.